Devi Geethai 1.1-1.4

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

देवी उवाच -
श‍ृण्वन्तु निर्जराः सर्वे, व्याहरन्त्या वचो मम ।
यस्य श्रवणमात्रेण, मद्रूपत्वं प्रपद्यते ॥ १॥

தேவி உவாச -

ஶ்ருʼண்வந்து நிர்ஜரா꞉ ஸர்வே, 
வ்யாஹரந்த்யா வசோ மம .
யஸ்ய ஶ்ரவணமாத்ரேண, 
மத்³ரூபத்வம்ʼ ப்ரபத்³யதே .. 1..

மூப்பற்ற தேவர்கள் அனைவரும் இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். அதைக்கேட்ட மாத்திரத்தில் நீங்கள் அனைவரும் என் சொரூபத்தை அடைவீர்கள் என்றாள் தேவி.

______

अहमेवास पूर्वं मे, नान्यत्-किञ्चित्-नगाधिप ।
तदात्मरूपं चित्संवित्, परब्रह्मैक-नामकम् ॥ २॥

அஹமேவாஸ பூர்வம்ʼ மே, 
நான்யத்கிஞ்சின்னகா³தி⁴ப .
ததா³த்மரூபம்ʼ சித்ஸம்ʼவித், 
பரப்³ரஹ்மைக-நாமகம் .. 2..

ஸ்ருஷ்டிக்கு முன் என்னைத்தவிர வேறொன்று இன்றி, ஆத்மரூபமாகவும், சித்ஸம்வித் ரூபமாகவும், பரப்ரஹ்மா என்ற ஏகநாமத்துடன் நான் மாத்திரம் இருந்தேன்.

_______

अप्रतर्क्यम्-अनिर्देश्यम्, अनौपम्यम्-अनामयम् ।
तस्य काचित्-स्वतःसिद्धा, शक्तिर्मायेति विश्रुता ॥ ३॥

அப்ரதர்க்யம்-அநிர்தே³ஶ்யம்,
அனௌபம்யம்-அநாமயம் .
தஸ்ய காசித்-ஸ்வத꞉ஸித்³தா⁴, 
ஶக்திர்மாயேதி விஶ்ருதா .. 3..

அந்த பரப்ரம்மம், இப்படிப்பட்டது என்று அளவுபடுத்தற்கு அரியது. உபமானமற்றது. அப்படிப்பட்ட பரப்ரம்மமாகிய என்னிடம், நீக்கமற்று இருப்பதான ஒரு சக்தி உள்ளது. அது மாயாசக்தி எனப்படுகிறது.

________

न सती सा नासती सा, नोभयात्मा विरोधतः ।
एतद्-विलक्षणा काचित्, वस्तुभूताऽस्ति सर्वदा ॥ ४॥

ந ஸதீ ஸா நாஸதீ ஸா,
நோப⁴யாத்மா விரோத⁴த꞉ .
ஏதத்³விலக்ஷணா காசித்³,
வஸ்துபூ⁴தா(அ)ஸ்தி ஸர்வதா³ .. 4..

அந்த மாயா சக்தி, 'சத்' என்றோ, 'அசத்' என்றோ, 'சத்அசத்' கூடிய ஒன்று என்றோ சொல்லத்தக்கதல்ல. இப்படிப்பட்ட லஷணங்களுடைய ஏதோ ஒரு வஸ்து எப்போழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.

_________

Next | DeviGeethai Beginning

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36