Devi Geethai 1.11-1.16

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

एवं नानाविधानि स्युः, नामानि निगमादिषु ।
तस्या-जडत्वं दृश्यत्वात्, ज्ञान-नाशात्-ततोऽसती ॥११॥

ஏவம்ʼ நானாவிதா⁴னி ஸ்யு:,
நாமானி நிக³மாதி³ஷு .
தஸ்யா-ஜட³த்வம் த்³ருʼஶ்யத்வாத்,
ஜ்ஞான-நாஶாத்-ததோ(அ)ஸதீ ..11..

இவ்வாறாக இந்த மாயை வேதாதிகளில் நானாவிதமான பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மாயை கண்ணால் காணப்படுபவற்றில் ஜடத்வமாக சொல்லப்படுகிறது. அதுவே அஞ்ஞான எண்ணங்களின் 'அசத்' எனப்படுகிறது.

__________

चैतन्यस्य न दृश्यत्वं, दृश्यत्वे जडमेव तत् ।
स्वप्रकाशं च चैतन्यं, न परेण प्रकाशितम् ॥ १२॥

சைதன்யஸ்ய ந த்³ருஶ்யத்வம், 
த்³ருஶ்யத்வே ஜட³மேவ தத் .
ஸ்வப்ரகாஶம்ʼ ச சைதன்யம், 
ந பரேண ப்ரகாஶிதம் .. 12..

(சைதன்ய சம்பந்தத்தால் இம்மாயையையும் சைதன்யம் என்று சொல்லலாமா?) சைதன்யத்திற்கு காணப்படும் தன்மை இல்லை. மாயை காணப்படுவதால் அது ஜடமே ஆகும். சைதன்யம் சுயமாக ப்ரகாசிப்பதாகும். மற்றொன்றால் ப்ரகாசிக்கப்படுவது அன்று.

_________

अनवस्था-दोषसत्त्वात्, न स्वेनापि प्रकाशितम् ।
कर्मकर्तृ-विरोधः स्यात्, तस्मात्-तत्-दीपवत्-स्वयम् ॥ १३॥

அனவஸ்தா²-தோ³ஷஸத்த்வாத்,
ந ஸ்வேனாபி ப்ரகாஶிதம் .
கர்மகர்த்ருʼ-விரோத⁴꞉ ஸ்யாத்,
தஸ்மாத்-தத்³-தீ³பவத்-ஸ்வயம் .. 13..

சைதன்யம் மற்றொன்றால் ப்ரகாசிக்கப்படுகிறது என்று எடுத்துக் கொண்டால், அதற்கு நிலையற்ற தன்மை என்ற தோஷம் வந்து விடும். செய்பவனும், செய்யப்படும் காரியமும் ஒரே பொருளாய் இருக்க முடியாது. அதனால் சைதன்யம் மற்றொன்றால் ப்ரகாசிக்கப் படுவதல்ல. சைதன்யம் தீபம் போல தன்னையே சுயமாக ப்ரகாசித்துக் கொள்ளக் கூடியது.

__________

प्रकाशमानम्-अन्येषां, भासकं विद्धि पर्वत ।
अत एव च नित्यत्वं, सिद्धं संवित्-तनोर्मम ॥ १४॥

ப்ரகாஶமானம்-அன்யேஷாம்ʼ, 
பா⁴ஸகம்ʼ வித்³தி⁴ பர்வத .
அத ஏவ ச நித்யத்வம்ʼ,
ஸித்³த⁴ம்ʼ ஸம்ʼவித்-தனோர்மம .. 14..

சைதன்யமானது தீபம் போல தன்னைத்தான் ப்ரகாசித்துக் கொண்டு, தன்னிலிருந்து வேறான எல்லா பொருளையும் ப்ரகாசிக்கச் செய்கிறது என்று அறிந்து கொள், பர்வதா! அதனால் இந்த என்னுடைய ஞான சொரூபமானது என்றும் அழியா நிலையும், நித்யத்வமும் கொண்டது.

________

जाग्रत्-स्वप्न-सुषुप्त्यादौ, दृश्यस्य व्यभिचारतः ।
संविदो व्यभिचारश्च, नानुभूतोऽस्ति कर्हिचित् ॥ १५॥

ஜாக்³ரத்-ஸ்வப்ன-ஸுஷுப்த்யாதௌ³, 
த்³ருʼஶ்யஸ்ய வ்யபி⁴சாரத꞉ .
ஸம்ʼவிதோ³ வ்யபி⁴சாரஶ்ச, 
நானுபூ⁴தோ(அ)ஸ்தி கர்ஹிசித் .. 15..

காணப்படும் பொருளுக்கு, ஜாக்ரத-ஸ்வப்பன-ஸுஷுப்தி முதலிய நிலை மாற்றங்கள் உண்டு. ஸம்வித் ஆன சைதன்யம், எப்போதுமே மாற்றங்களை அனுபவிப்பதில்லை.

________

यदि तस्यापि-अनुभवतर्हि, अयं येन साक्षिणा ।
अनुभूतः स एवात्र, शिष्टः संविद्-वपुः पुरा ॥ १६॥

யதி³ தஸ்யாபி-அனுப⁴வதர்ஹி,
அயம்ʼ யேன ஸாக்ஷிணா .
அனுபூ⁴த꞉ ஸ ஏவாத்ர, 
ஶிஷ்ட꞉ ஸம்ʼவித்³-வபு꞉ புரா .. 16..

ஒருவேளை சைதன்யத்திற்கும் அம்மூன்று அவஸ்தைகளின் அனுபவம் உண்டெனின், இதற்கு வேறாக, இதை அனுபவிக்கச் செய்யகூடிய ஒரு சாக்ஷி இருக்க வேண்டுமன்றோ? இந்த ஸம்வித் ஸ்வரூபம் ஸ்வயம்-ப்ரகாசமானது, வேறொன்றால் ப்ரகாசிப்பதன்று என முன்னமே கூறப்பட்டபடியால், இதற்கு வேறொரு சாக்ஷி எங்ஙனம் இருக்க முடியும்?

_________


Next | DeviGeethai Beginning | Previous

Comments

Popular posts from this blog

Devi Geethai - 1.0

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36